வள்ளுவனிடம் காதல் கற்போம்
முகப்பு
காதல்
காமம்
ஞாயிறு, 17 அக்டோபர், 2010
கொல்லும் விழி
நான் யமனை
முன்பு கண்டறியேன்
ஆனாலும்
இப்போது உன்னைக்
கண்டபின்தான்
தெரிகிறது
அது பெண்மையுடன்
ஆளைக் கொள்ளும்
இரு வாள் விழியைக்
கொண்டதென்று...
காதல் - 3
குறள்
-
1083
"பண்டறியேன் கூற்று என்பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்கு"
புதன், 13 அக்டோபர், 2010
சுட்டுவிழிப் பார்வை
ஏய் பெண்ணே நீ
என்னைப் பார்த்ததால்
நானும் உன்
வேல் விழியை
சற்றே உற்றுப் பார்த்தேன்
ஆனால்...
மறுகணமே - நீ
என்னைச் சுட்டுவிடும்
பார்வையால்
திரும்பிப் பார்த்த
பார்வை இருக்கே...
படை கொண்டு
என்னைத்
தாக்குவது போல்
படு பயங்கரமானது
காதல் - 2
குறள்
-
1082
" நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து "
திங்கள், 11 அக்டோபர், 2010
நீயார் பெண்ணே !
பரம் சுமந்த
காதணி உடையவளே
நீ
தெய்வப் பெண்ணோ
மயிலோ
உன்னைப் பார்த்தவுடன்
என் நெஞ்சு
மயங்குதே நீயார்
பெண்ணே
காதல் -1
குறள் -1081
புதிய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)